என் பிரியமான தோழரே... இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் அறம், பொருள், இன்பம் என முப்பெரும் பிரிவுகளையும் உள்ளடக்கியது என்பது யாவரும் அறிந்தது. ஆனால் திருக்குறளைப் பற்றி சில தெரியாத செய்திகள் இதோ.....
1. ஓலைச்சுவடிகளில் இருந்த திருக்குறள் 1612 ஆம் ஆண்டு முதன் முதலில் அச்சிடப்பட்டது.
2. திருக்குறளின் மூலத்தை முதலில் அச்சிட்டவர் தஞ்சாவூரைச் சேர்ந்த ஞானபிரகாசம்.
3. திருக்குறளுக்கு முதலில் உரை எழுதியவர் மணிக்குடவர் .
4. திருக்குறளை பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்தவர் வீரமாமுனிவர்.
5. திருக்குறள் முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட மொழி இலத்தின் (கி.பி. 1730) .
6. திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
7. திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் இயற்றியுள்ளார்.
8. திருக்குறள், தமிழ்மொழியின் முதல் எழுத்து ‘அ’ வில் ஆரம்பித்து தமிழ்மொழியின் கடைசி எழுத்து ‘ன்’ – இல் முடிந்துள்ளது.
9. உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் திருக்குறள் மூன்றாம் இடத்தை வகிக்கிறது.
திருக்குறள் - நூல் அமைப்பு
நிலைகள் | கூறுகள் | எண்ணிக்கை | |||||||
பால் | அறம் | பொருள் | இன்பம் | 3 | |||||
இயல் | பாயிரம் | இல்லறம் | துறவறம் | அரசு | அங்கம் | ஒழிபு | களவு | கற்பு | 8 |
அதிகாரம் | 4 | 20 | 14 | 25 | 32 | 13 | 7 | 18 | 133 |
குறள் | 40 | 200 | 140 | 250 | 320 | 130 | 70 | 80 | 1330 |

No comments:
Post a Comment