Thursday, 15 March 2012

மாயன் குழு


தற்போதெல்லாம் தோண்டி எடுக்கப்படும் சமுதாய சிதிலங்களும்அடையாளங்களும்,அக்கால மனிதர்கள் மிக நாகரீகமாகவும்,அறிவுப்பூர்வமாகவும் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கிறதுநாம் வாழும் இன்றைய காலத்தோடு ஒப்பிடுகையில் ,இக்கருத்து நூறு சதவீதம் உண்மை என்று தோன்றுகிறதுவானவியல் அறிஞர்களும்,தொல்லியல் ஆராய்ச்சியாளர்களும் மிகவும் வியந்து போற்றும் கலாச்சாரம்மாயன் கலாச்சாரம்இவர்களின் கட்டிடங்கள்,சாஸ்திர சம்பிரதாயங்கள்இலக்கியங்கள்,கணிதம் ,வானவியல் அறிவு என விரிந்து பரந்து காணப்படும் அறிவின் தீட்சண்யத்தில் இன்றைய மனித சமுதாயம் மிகவும் ஆச்சரியத்தோடு பார்க்கிறதுஇன்னும் 10வருடங்களில் பூமிக் கோளம் அழிந்துவிடும் .மாயன் காலண்டரில் பூமிக் கோளத்தில் ஆயுள் கணக்கு முடிவு அடைகிறது என்று சிலர் புரளியைக் கிளப்பிவிட மாயன் என்ற வார்த்தை எல்லோராலும் அறியப்பட்ட ஒன்றாகிப்போனது. ‘மீசோ --அமெரிக்கன் நாகரீகம் என அழைக்கப்படும் மாயன் நாகரீகம் 2000 கி.மு----250 கி.பி (PRE CLASSIC PERIOD) ஆண்டுகளில் அதிக பட்ச வளர்ச்சி அடைந்திருந்தது250 கி.பி.---900 கி.பி (CLASSIC PERIOD)ஆண்டுகள் நாகரீகத்தின் உச்சகட்ட காலம் என தற்போதைய ஆய்வறிஞர்களால் அழைக்கப்படுகிறதுஹோண்டுராஸ் ,கெளதமாலாவட எல் சால்வடார் ,மத்திய மெக்ஸிகோ என கிட்டத்தட்ட 625 மைல்கள் விரிந்து பரந்து காணப்பட்டதுஇதில் நக்பே ,எல்மிராடர் ,சிவல்மற்றும் சான் பார் டோலோ போன்றவை தென்மாயன் தாழ்நிலை பகுதிகளாகவும்(LOWLANDS) ,கமினல் ஜூவில்உயர்நிலைப் பகுதிகளாக(HIGH LANDS) துவங்குகிறதுதற்கால சுற்றுச் சூழல் பேரழிவுகள், மாயன் காலத்தில் கணித்து எழுதப்பட்ட வானவியல் சாஸ்திரங்களையும்காலண்டர்களையும் நினைவுக்குக் கொண்டு வருகிறது.தற்போது நடைபெறும் ,நடைபெற போகின்ற நிகழ்வுகளை சூசகமாகக் கணித்துக் கூறியுள்ளனர் என்கிறார் டாக்டர் .ரிச்சர்ட்சன் பி.பில்இவர் மாயன் காலத்தையும்அவர்களது நாகரீகத்தையும் சிறந்த முறையில் ஆராய்ந்து நூலாக்கியவர்.
மாயன் காலண்டர் ஏறத்தாழ 11 ஆகஸ்டு 3114 கி.மு.வில் தொடங்குகிறது.சூரியன் ,சந்திரன்மழை ,தீ என கிரகங்களும் ,ஐம்பெரும் பூதங்களும் தெய்வங்களாக வழிபடப்பட்டனமாயன் காலண்டர் என்பது 17 வகையாகப் பிரிக்கப்படுகிறதுஅதில் சூரிய காலண்டர் புகழ் பெற்றதுஇது 360 நாட்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதுஇதுவே தற்கால காலண்டர் ஆராய்ச்சியின் மூல வேராகும்பண்டைய உலகின் மிக நாகரீகமானசொகுசான கட்டிடக் கலை இவர்களுடையதுஸ்டெப்டு பிரமிடுகள் மிகவும் புகழ்பெற்றவைஜோலியா குகை நஜ் துனிக்கேலண்டிரியா குகைமந்திரவாதி குகை,(CAVE SITES)போன்றவைகளிலிருந்தே ,இம்மக்களின் புனைவுகள்(MYTHS)அவதானிக்கப்படுகிறதுசியாபாஸ் மேல்நிலை பகுதிஇன்றும் பயன்பாட்டில் உள்ளது ,அதன் தரத்திற்கான சான்றுஇந்நாகரீகம் அரசாட்சி முறையில் ஆளப்படவில்லையாரும் யாரையும் ஆளவில்லைஅவர்கள் ,சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து வந்தனர்தங்களுக்கென சட்டதிட்டங்கள் ,கலாச்சாரங்கள்,சடங்கு சம்பிரதாயங்களை வகுத்து கொண்டனர்ஒரு குழு மற்றொரு குழுவுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொண்டதாக சாட்சியமில்லைஎன்ன நேர்ந்தாலும் ,அதை மற்றவர்கள் கண்டுகொண்டதேயில்லைஆபத்தான நிலையிலும் கூடஇந்தக் கலாச்சாரம்கிளாசிக் காலத்தில் சற்று மாறத் துவங்கியதுஅப்போது மிக பலம் கொண்ட அரசர்கள் தோன்றினர்அதாவது குழுவில் "தலைவன் பதவிஉருவாக்கம் கொண்டதுஆட்சி முறை வடிவெடுத்ததுடிகால்காளாக்முல்காராகோல்டோஸ்பிளாஸ் போன்றவை பகுதிகளாக உருவாக்கம் பெற்றுஒரு தலைமையின்கீழ் ஆட்சிக்கு வந்தது.அப்போதும் எந்த அரசனும்மற்ற அரசனின் ஆட்சி பகுதியில் உட்புகவில்லை.தனி சுதந்திர நாடுகளின் தொகுப்பாக மட்டுமே இருந்து வந்ததுதங்களுக்கென அவர்கள் உருவாக்கிய கட்டிடங்கள்நிர்வாகம்நாகரீகப் பொருட்கள் போன்றவை ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவிற்கு ஆச்சரிய மூட்டும் விதமகவே உள்ளதுஇவ்வாறான செய்கையின் மூலமே ஒருவர் மற்றவரை விட மேதமை பொருந்தியவர் என வெளிப்படுத்திக் கொண்டனர்.
இவர்களின் பொருளாதாரம் வாணிபத்திலும்விவசாய விளைப்பொருட்களின் மூலமும் ஈட்டப்பட்டதுதங்களது பண பரிவர்த்தனையாக கோகோ விதைகள்தாமிர மணிகள்கடல் சங்குகள் ,ஜேட் கற்களை உபயோகித்தனர்சோளம் (1000கி.மு)பீன்ஸ்(5000 கி.முசிரிபெப்பர்,பனை ,வெனிலா போன்றவை பயிரிடப்பட்டனஇவர்கள் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்தபோது ஐரோப்பியர்கள் இருண்ட காலகட்டத்தில் இருந்தனர்கணிதம்வானவியல்நீர் மேலாண்மைஜோதிடம் போன்றவை மாயன்களின் வாழ்வில் ஒவ்வொரு மணித்தியானங்களோடு பின்னிப் பிணைத்திருந்ததைக் கண்டு அவர்கள் பொறாமை கொண்டனர்கட்டிடங்கள் செங்கற்களால் கட்டப்பட்டனஇவை ஒரே அளவீட்டைக் கொண்டவை.அடுக்கு முறையில் சுவர்கள் கட்டப்பட்டனசூரியனின் ஒளிக் கதிரின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு கட்டிடங்களை எழுப்பினர்ஏனெனில் பூமி தட்டையானது என அவர்கள் நம்பினர்மழையைக் கடவுளாக நம்பி ,அவர் மனம் குளிரபல சடங்குகளை செய்தவண்ணம் இருந்தனர்குதிரை,காளைக்கன்று பலி கொடுத்தல் போன்றவை நடைபெற்றனதங்கள் கட்டிடங்களுக்குக் கதவுஜன்னல்பொருத்தினர்சாளரத்தின் வழியே வான் கடவுளையும் ,நட்சத்திரத்தையும்வழிபட்டனர்பால்வெளியில் கிரகங்கள் இருக்கிறது என்றும் ,அது மந்திர்பாதை என்றும் நம்பினர்இந்தக் காலகட்டத்தில் சாமியார்கள்குறிசொல்பவர்கள்கடவுளுக்கு நிகராக மரியாதை பெற்றனர்தற்போதைய யோகா முறைகளைக் கற்று தங்களுக்கு உரிய முறையில் மாற்றினர்யோக உடலில் இருக்கும் ஆறு சக்கரங்களைப் பற்றி விரிவாக எழுதியதோடல்லாமல் ,அது சார்ந்த உடலியல்வாழ்வியல் தத்துவங்களை ஆன்மீக பார்வையோடு உருவாக்கினர்பொழுது போக கல்லாலான பந்து கொண்டு எறிந்து விளையாடியதாக ஆய்வறிஞர்கள் கருதினர்இவ்வாறான ஒரு பந்து டிகால் பகுதியில் கிடைத்துள்ளதுதவிர பந்து விளையாடும் மைதானம்,(BALL COURT) அதற்கான கணக்கீடு அமைப்பு போன்றவையும்தோண்டி எடுக்கப்பட்ட கோவிலுக்குப் பின்புறம் காணப்படுகிறது.
மழை கடவுளின் மறு அவதாரமாகவே தண்ணீரைப் போற்றினர்அவர்களின் நீர் மேலாண்மை அறிவு மிகவும் ஆச்சரியமாகவே உள்ளதுதற்போது தென் மெக்ஸிகோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குளம் ,இதற்கான சான்றுமழைநீர் சேமிப்பு குழாயோடு இணைக்கப்பட்டுள்ளதுஓடும் தண்ணீரில் நீரூற்று,கால்வாய் போக்குவரத்துகழிவு அறை சுத்தம் செய்ய குழாய் அமைப்பு போன்றவை அறிவியல் நுட்பத்தோடு அமைக்கப்பட்டுள்ளதுமெக்ஸிகோ நகரில் சியாபாஸ் இடத்தில் வீடுகள்மாளிகைகள்கோவில்கள் என ஆறாயிரம் சிதிலங்கள் கண்டறியப்பட்டுள்ளதுஇது கி.பி 100--800 வருடப் பழமையானது.இர்க் ஃபிரெஞ்ச் என்ற ஆய்வறிஞர் இதைக் கண்டறிந்தார்தண்ணீரை அழுத்தம் கொடுப்பதன் மூலம் அதன் இயல்பு ஓட்டத்தை தங்களுக்கு ஏற்ற வாறு மாற்றிக் கொண்டனர் என்பதைக் கண்டறிந்தார்அதற்காகப் பெரிய துளைபின் அதைச் சிறியதாக மாற்றியது போன்ற கணித அறிவியல் அமைப்புகளும்வட்ட வடிவ கால்வாய் அமைப்பு நீர் கடத்தியாகச் செயல்பட்டதையும் அவர் கண்டறிந்தார்.தங்கள் இருப்பிடத்தைச் சுற்றி தண்ணீர் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர்தண்ணீர் மூலமாக சக்தி (POWER) திரட்டி அதைப் பல விதங்களிலும் உபயோகித்தனர்216 அடி நீள வாய்க்கால், 20 அடி உயர நீர் வீழ்ச்சி , 150 மீ.தூரத்திற்குத் தண்ணீரைக் கடத்தியது அதை விவசாயத்திற்காக ,பாசன அமைப்பாக மாற்றிக் கொண்டது போன்றவை இவர்களின் அசாத்தியமான நீர் மேலாண்மைத் திறனை வெளிப்படுத்துகிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு ,பீன்ஸ்பாதாம்பருப்பு போன்றவை இவர்களின் தினசரி உணவாகவே இருந்து வந்துள்ளதுதவிர பூமிக்கடியில் சேமிப்புக் கிடங்கு தோண்டி ,உணவுப் பொருட்களைப் பாதுகாத்தனர்இது பஞ்சகால உணவுத் தட்டுப்பாட்டை நீக்கியதுஓய்வு நேரங்களில் ஓவியம் வரைந்தனர்,சிற்பங்கள் செதுக்கினர்கலைக் கூடங்கள் அமைத்தனர்அணிகலன்கள் உருவாக்கினர்ஓவியங்களில் "டர்கிஷ் ப்ளூ என்ற நீல வண்ணத்தை அதிகம் உபயோகித்தனர்இது மாயன் நீலம் என்றே இன்றும் அழைக்கப்படுகிறது.இளைஞர்கள் பச்சைக் கற்கள் பதித்த அணிகலன்களை அணிந்து பெண்களைக் கவர முற்பட்டனர்வெற்றி பெற்றவர்கள்காதலின் வெற்றி சின்னமாக ஓங்கிய கோபுரங்கள் கொண்ட மீசோ --அமெரிக்கன்"கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கும் கோபுரங்களை மிகுந்த நுணுக்கத்துடன் செதுக்கினர்அதன் உச்சியில்குழுக்களின் இஷ்ட தெய்வ சிலைகள் பொருத்தப்பட்டனஇன்றும் இவ்வாறான கட்டிடங்களை காலாடுல்கோபாகோபன்டிகால்உக்சல் போன்ற இடங்களில் காணலாம்இவைகளின் இருப்பையும் காலத்தையும் ரேடியோ கார்பன் முறையில் கண்டறிகின்றனர்.
மக்கள் தொகை பெருக்கம் மெதுவாக உணவுப் பஞ்சத்தைக் கொணரத் துவங்கியதுஇதனால் சத்துக் குறைவு ஏற்பட்டதுடன்நோய்களும்தொற்று நோய்களும் உருவாகினஇவர்களின் வளர்ச்சி ,வெளிநாட்டுப் படையெடுப்புக்கு வழிவகுத்ததுகுறிப்பாக ஸ்பானிய படையெடுப்பு மிகுந்த நாசத்தை உருவாக்கியது மாயன் குழுக்களுக்கிடையே தொடர்பு இல்லாதது இப்போது மிகுந்த குறைபாடாக மாறிப் போனதுஎனவே அந்நியர்கள் மிகவும் எளிமையாக இவர்களைத் தோற்கடித்தனர்மாயன்களின் முக்கிய வாணிப தடங்கள் அழிக்கப்பட்டனவிவசாயிகள் கோபம் கொண்டு தங்கள் குழுக்களுக்குள்ளேயே சண்டைபோட்டுக் கொண்டனர்காலப் போக்கில் இது பெரும் யுத்தமாகவே மாறிப் போனதுஇயற்கைச் சீரழிவுக் காலநிலை மாறுபாடு என பல காரணிகள்பண்டைய நவ நாகரீக சமுதாயத்திற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தது.

No comments:

Post a Comment